tamilnadu

img

மக்களுக்கு பிடித்தவர்கள் ஆள்வார்கள் ; ராஜ்நாத் சிங்

லக்னோ:

மத்திய உள்துறை அமைச்சரும், லக்னோ தொகுதி பாஜக வேட்பாளருமான ராஜ்நாத் சிங், திங்களன்று லக்னோ தொகுதியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராஜ்நாத் சிங், “தேர்தல் முடிவு குறித்து, தன்னால் எதையும் கணிக்க முடியவில்லை” என்றம், “லக்னோ வாக்காளர்களின் முடிவுக்கு அதை விட்டுவிடுகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும், “யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் மக்களுக்கு முழு உரிமையும் உள்ளது; மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்களோ அவர்களே நாட்டை ஆள்வார்கள்” என்றும் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.